காஞ்சிபுரம்: காசி, அயோத்தி, காஞ்சிபுரம் உள்பட ஆன்மிக ஸ்தலங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவை தொடங்க பரிந்துரைக்கப்படும் என ரயில்வே வாரிய தென் மண்டல ஆலோசனை குழு உறுப்பினர் எம்.வேல்முருகன் தெரிவித்தார். ரயில்வே வாரிய தென்மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.வேல்முருகன் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. அரக்கோணம், காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் ஆய்வு செய்தோம். ரயில் பயணிகளிடமும், ரயில்வே ஊழியர்களிடமும் குறைகளை கேட்டு அறிந்து கொண்டோம். காஞ்சிபுரத்தில் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றோம்.