டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத்திரை’ நடைபெறும். இந்த யாத்திரையை மேற்கொள்ளும் சிவபக்தர்கள் ‘கன்வாரியாக்கள்’ என்று அழைக்கப்படுவர். யாத்திரையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று கங்கை நீரை எடுத்து செல்வார்கள். அந்த கங்கை நீரை, தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களுக்கு கொண்டு சென்று, சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த யாத்திரைக்கு பெயர் கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.