செங்கம் : செங்கம் பகுதியில் உள்ள ஆற்றில் குப்பை கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம் நகரில் உள்ள ஆற்றில் கிணறுகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆற்றில் சிலர் கழிவுநீரை திறந்துவிடுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் குப்பை கழிவுகளை ஆற்றில் கொட்டி விட்டு செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.