தமிழகம் தமிழ் மொழியில் குறிப்புகள் பராமரிக்கும் அலுவலர்களுக்கு பரிசு வழங்கல் Jul 13, 2021 சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் மொழியில் வரைவுகள், குறிப்புகள், பராமரிக்கும் அலுவலர்கள் ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து பரிசுக்கான காசோலையை வழங்கினார். கலெக்டர் அலுவலக உதவி வருவாய் அலுவலர் பூங்கோதை முதல் பரிசு ரூ.3 ஆயிரம், சிவகங்கை அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக உதவியாளர் ஆஷாபானு இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், சிவகங்கை பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் அலுவலக உதவியாளர் ஹபீப்ராசா மூன்றாம் பரிசு ரூ.ஆயிரத்திற்கான காசோலையும் பெற்றனர். சார்நிலை அலுவலகங்கள் சார்பாக சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் மரியாள் முதல் பரிசு ரூ.3 ஆயிரம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராஜன், அலுவலக கண்காணிப்பு அலுவலர்கள் வெண்ணிலா, சிராஜ்தீன், முனியசாமி, கார்த்திகா கலந்து கொண்டனர்.
வேலூர், விழுப்புரம் என 161 ரயில் நிலையங்களில் 15.071 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு ₹857 கோடி வருவாய் ஈட்டி சாதனை
தமிழ்நாடு அரசின் குரூப் 1 தேர்வில் மூன்றாம் முறையாகக் கலந்து கொண்டு விடாமுயற்சியால் வெற்றி பெற்ற பீடித் தொழிலாளி மகள் ஸ்ரீமதி
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம்: ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு.! ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்: தமிழக அரசு தகவல்
சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
தொழிலாளர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி..! சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனை
காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
போலி மருத்துவ சான்றிதழ் தந்து பரோல் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு