கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கொள்ளிடத்தில் உள்ள பல கிராமங்களுக்கு குடிநீர் அளிக்கப்பட்டு வருகிறது. வடரங்கம் நீரேற்று நிலையத்திலிருந்து கொள்ளிடம் பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் பிரதான குடிநீர் குழாய் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் நேற்று 6 அடி நிலத்துக்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவில் வெளியேறிக் கொண்டிருந்தது. இதனால் தைக்கால், சையது நகர், கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டது.