பாணாவரம் : பாணாவரம் அடுத்த மேலேரி கிராமத்தில் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முறையாக பராமரிக்கப்படாமலும், மூடப்படாமலும் திறந்த நிலையில் இருந்ததால் பறவைகளின் கழிவு மற்றும் காற்றில் இருந்து வரும் பல்வேறு கழிவுகள் குடிநீரில் கலக்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.