சென்னை: நீட் பாதிப்பை கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், தங்கள் தரப்பின் கருத்துக்களை முன்வைக்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் பாதிப்பை கண்டறியும் வகையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த நிலையில் இந்த குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜ சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜவின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் வழக்கு தொடர்ந்துள்ளது.