பவானி: பவானி அருகேயுள்ள தொட்டிபாளையம் ஊராட்சி, ஜல்லிக்கல்மேடு கிராமத்தில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் கணபதி, அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன், வீரகாரன் மற்றும் கருப்பண்ணசாமி ஆகிய சாமிகளுக்கு கோயில் உள்ளது. இக்கோயிலைப் புதுப்பித்து கடந்த வருடம் மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அப்போது, பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அதே பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஜேசிபி எந்திரம் கொண்டு கோயிலின் மேற்கூரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை இடித்து தரைமட்டமாக்கினர்.
இதையடுத்து, பவானி வருவாய்த்துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.