டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது, தமிழக அரசியல் மற்றும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலை குறித்து பிரதமரிடம் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஆளுநரின் செயலாளர் 2 நாட்களுக்கு முன் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆளுநரை நியமித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் நேற்று திடீரென டெல்லி சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது.

இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்பட உள்ளதாக பரவலாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை டெல்லியில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். இன்று மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் சந்திக்க உள்ளார். அடுத்தடுத்து தலைவர்களுடன் சந்திப்பால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: