அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவு..!!

சென்னை: அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் நடந்த ஆள்மாறாட்டம், போலி பத்திரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசு நிர்ணயித்த தொகையை விட குறைத்து பத்திரப்பதிவு செய்தவர்கள் குறித்து வருவாய்த்துறை விசாரணை நடத்தி வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக முதலமைச்சர் நிறைவேற்ற உறுதி அளித்துள்ளார் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: