மதுரை: மதுரை மாவட்டம், மலையாண்டிபுரத்தைச் சேர்ந்த ஜலாலுதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மக்கள்தொகை உயர்வுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை. இதனால், இஸ்லாமியர்களால் அரசின் சலுகைகளையும், வாய்ப்புகளையும் முழுமையாக பெற முடியாத நிலை உள்ளது. கேரளாவில் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆந்திராவில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.