ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு பெப்சி எதிர்ப்பு

சென்னை: பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கேசெல்வமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவில் உள்ள நல்ல அம்சங்களை வரவேற்கிறோம். ஆனால், தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை ெசய்யலாம் என்ற திருத்தத்தை கடுமையாக எதிர்க்கிறோம். இது படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும். எனவே, இதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மக்களின் கருத்தை மதிக்காத எந்த அரசும் நிலைத்ததில்லை என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்’ என்றார்.

Related Stories: