பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பெரம்பலூரில் இருந்து செஞ்சேரி- செட்டிக்குளம் பிரிவு ரோடு வரை ஏற்கனவே இருவழி சாலையாக மாற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது துறையூர் சாலையில் செஞ்சேரி பிரிவு ரோடு துவங்கி துறையூர் புறவழி சாலை வரை செல்லும் சாலை இருவழி சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த சாலையில் செஞ்சேரி- பாளையம் இடையே உள்ள சாலையில் புதிய பாலம் கட்டுவதற்காக தற்காலிகமாக மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் இந்த சாலை சேறும் சகதியாக மாறியதுடன் பள்ளங்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.