திருபுவனை: புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே கேட் , காந்தி சிலை, எம்ஜிஆர் திடல் எதிரே ஆகிய 3 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்து பற்றி விவரம் அறிய முடியாமலும், நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் பற்றி விவரம் காண முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டத்தையும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.