உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் பொது சந்தை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இவற்றை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சாலவாக்கம் பகுதியில் இயங்கி வரும் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தினை பார்வையிட்டார். பின்னர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடந்து வரும் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.