மீனம்பாக்கம்: சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24.2 லட்சம் மதிப்புடைய 495 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, திருவாரூரை சேர்ந்த பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர். சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது திருவாரூரை சேர்ந்த கலையரசன் கருணாநிதி (31) என்பவர், ‘என்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை’ என்று கூறி விட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார.