டாக்கா: பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா ஆகியோருக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாம்பழங்களை பரிசாக அனுப்பி வைத்தார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் இதர தலைவர்களுக்கு 2, 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக வங்கதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா - வங்காளதேசம் இடையிலான நட்புறவின் அடையாளமாக, பிரதமர் ஷேக் ஹசினா மாம்பழப் பரிசை அளித்தார்.