மோடி, மம்தாவுக்கு மாம்பழம் பரிசு: வங்கதேச பிரதமர் அனுப்பினார்

டாக்கா: பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா ஆகியோருக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாம்பழங்களை பரிசாக அனுப்பி வைத்தார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் இதர தலைவர்களுக்கு 2, 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக வங்கதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா - வங்காளதேசம் இடையிலான நட்புறவின் அடையாளமாக, பிரதமர் ஷேக் ஹசினா மாம்பழப் பரிசை அளித்தார்.

சுமார் 260 பெட்டிகளில் மாம்பழங்கள் வைக்கப்பட்டு, சரக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. எல்லையைக் கடந்து இந்திய பகுதிக்குள் நுழைந்தபோது, கொல்கத்தாவில் உள்ள வங்காளதேச துணை தூதரகத்தின் முதன்மை செயலாளர் முகமது சமியுல் காதர் பெற்றுக் கொண்டார். அவர் மூலம் தலைவர்களுக்கு பரிசாக வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: