பட்டுக்கோட்டை : ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிய நபரை தனது உயிரை துச்சம் என மதித்து காப்பாற்றிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த காவல் நிலைய காவலரான ராஜ கண்ணன் என்பவருக்கு பிரதமரின் உயிர் காக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ள 35 வயதான ராஜ் கண்ணன், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு ஆற்றில் விழுந்த ஒருவரை காப்பாற்றியதற்காக 2018ம் ஆண்டுக்கான பிரதமரின் உயிர் காக்கும் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.