காரைக்குடி: காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்எல்ஏ எஸ்.மாங்குடி பேசுகையில், காரைக்குடியில் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாகவும், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதே எனது முதல் இலக்கு.