சென்னை: ஓலா, ஊபர் நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் கார் இயக்கும் டாக்சி டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே ேநற்று காலை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது, 50க்கும் மேற்பட்ட டிரைவர்கள் தங்களது கார்களை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து எல்ஐசி சிக்னல் வரை வரிசையாக நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அண்ணாசாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது கார் டிரைவர்கள், ஓலா, ஊபர் நிறுவனங்கள் கடந்த 2014ம் ஆண்டு முதல் மீட்டர் கட்டணத்தை உயர்த்தவில்லை. எங்களிடம் இந்த நிறுவனங்கள் அதிக கமிஷன் வசூலித்து வருகிறது. எனவே தமிழக அரசு எங்கள் பிரச்னையில் தலையிட்டு புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் கோஷமிட்டபடி சாலையின் இடையே அமர்ந்தனர்.