புதுடெல்லி: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில், இந்த இடஒதுக்கீடுக்கு எதிராக அதே சமூகத்தை சேர்ந்த சந்தீப் குமார் என்பவர், கடந்த ஏப்ரல் 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தமிழகத்தில் சாதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.