திருமலை: தங்களுக்கு சொந்தமான நிலத்தின் பட்டா மாற்றுவதற்காக லஞ்சம் கொடுக்க பணம் இல்லாததால், தாசில்தார் அலுவலக வாயிலில் தாலியை தொங்கவிட்ட பெண்ணால் தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், ருத்ரங்கி மண்டலம், மணலா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேசம். இவரது மனைவி மங்கா. ராஜேசம் பெயரில் அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதித்து இறந்தர். இவர் பெயரில் இருந்த நிலத்தை வேறு பெண்ணின் பெயருக்கு தாசில்தார் பட்டா மாற்றி வழங்கினார். இதையறிந்த மங்கா, கடந்த 3 ஆண்டுகளாக தாசில்தார் அலுவலகத்தில் தன் கணவர் மீது இருந்த நிலத்தை தன் பெயருக்கு மாற்றி பட்டா வழங்க வேண்டும் என கேட்டு வந்துள்ளார்.