தமாகா மாவட்ட தலைவர்கள் நியமனம்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் புதிய மாவட்ட தலைவர்களை நியமித்து ஜி.கே.வாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 தமிழ் மாநில காங்கிரஸ், தென் சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக முனவர் பாட்சாவும், திருவள்ளுர் தெற்கு மாவட்டத் தலைவராக. மனோகரனும் நியமிக்கப்படுகிறார்கள். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவராக பதவி வகித்து வரும் தாம்பரம் மணி, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வேணுகோபால் அம்மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: