சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் அறமற்ற செயலை கண்டித்து வரும் 6ம்தேதி மமக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குள் இருக்கும் இந்த நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் உயர்த்துவதை வாடிக்கையாக ஒன்றிய அரசு செய்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்திருப்பது மிகப்பெரிய அவலம்.