புதுடெல்லி: சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வெளியாவதை தடுக்க நாடாளுமன்ற நிலைக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பேஸ்புக், டிவிட்டர், கூகுள், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி எம்பி. சசிதரூர் தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, டிவிட்டர் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவுக்கான கொள்கை இயக்குனர் ஷிவ்நாத் துக்ரால், பொது ஆலோசகர் நம்ரதா சிங் ஆகியோர் நேற்று நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகினர். இதே போல கூகுள் நிறுவன அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.