கோவை: கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை மற்றும் டாக்டர். ரெட்டிஸ் லெபாரேட்டரீஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இனைந்து ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியினை செலுத்துவதற்கான கோவிட்-19 தடுப்பூசி முகாமினை துவக்கி உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று ஜி.கே.என்.எம். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், தடுப்பூசிகளை குளிர்சாதன வசதியுடன் பாதுகாத்தல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு ஓர் முன்னோட்டமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.