சென்னை: பொதுப்பணித்துறையில் நிர்வாக பிரிவு உருவாக்கம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் நீர்வளத் துறைக்கு தனியாக துரைமுருகன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அதே போன்ற பொதுப்பணித்துறை அமைச்சராக ஏ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், பொதுப்பணி, நீர்வளத்துறையில் நிர்வாகத்தை பிரித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். அதில், பொதுப்பணித்துறையில் (பொது) நிர்வாக பிரிவு ஏற்படுத்தப்படுகிறது.