கொச்சி கடற்படை தளத்தில் ராணுவ சீருடையில் ஊடுருவிய வாலிபர்

திருவனந்தபுரம்: கொச்சி கடற்படைத் தளத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில், பிரமாண்டமான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கட்டப்பட்டு வருகிறது, இதை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் பார்வையிட்டார். இதற்காக, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகும் கடற்படை தளத்தில் ஒருவர் ராணுவ சீருடையில் சந்தேகப்படும்படி சுற்றினார்.  அவரை பிடித்து கடற்படை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, அவர் ராணுவ வீரர் இல்லை என்பதும், ராணுவ உடையில் கடற்படை தளத்தில் ஊடுருவியதும் தெரிந்தது.

பாதுகாப்பு மிகுந்த கொச்சி கடற்படைத் தளத்தில் கடற்படை சீருடையில் ஒருவர் ஊடுருவியது அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் கடற்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய பிறகு, கொச்சி துறைமுக போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர் தீவிரவாதியா? ஏன் கடற்படைத் தளத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: