சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்யாததே அதிமுக தோல்விக்கு காரணம்!: சசிகலா சாடல்..!!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்யாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்று பொன்னமராவதி அதிமுக நிர்வாகியுடன் தொலைபேசியில் பேசிய சசிகலா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக நிர்வாகிகள் பலருடன் சசிகலா தொலைபேசியில் உரையாடும் ஒலிப்பதிவு வெளியாகி வருகிறது. 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் அதிமுக நிர்வாகிகள் 8 பேருடன் பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது. பொன்னமராவதி அதிமுக நிர்வாகி பாரதிராஜாவுடன் பேசிய சசிகலா, அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார். அதில் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்று அவர் சாடியுள்ளார். 

விளம்பரங்களில் ஜெயலலிதா முகத்தை பார்க்க முடிவதில்லை என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் கட்சியை விட்டு நீக்கப்படும் நிலையில், அவருடன் பேசிய ஆடியோ நாள்தோறும் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஒரு சிலரின் சுயநலத்தினால் தான் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைய நேரிட்டதாக சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகியுடன் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: