சென்னை சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்யாததே அதிமுக தோல்விக்கு காரணம்!: சசிகலா சாடல்..!! Jun 26, 2021 ஜெயலலிதா சசிகலா சாடல் சென்னை: சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்யாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்று பொன்னமராவதி அதிமுக நிர்வாகியுடன் தொலைபேசியில் பேசிய சசிகலா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக நிர்வாகிகள் பலருடன் சசிகலா தொலைபேசியில் உரையாடும் ஒலிப்பதிவு வெளியாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் அதிமுக நிர்வாகிகள் 8 பேருடன் பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது. பொன்னமராவதி அதிமுக நிர்வாகி பாரதிராஜாவுடன் பேசிய சசிகலா, அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்பது குறித்து தெரிவித்துள்ளார். அதில் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்று அவர் சாடியுள்ளார். விளம்பரங்களில் ஜெயலலிதா முகத்தை பார்க்க முடிவதில்லை என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் கட்சியை விட்டு நீக்கப்படும் நிலையில், அவருடன் பேசிய ஆடியோ நாள்தோறும் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒரு சிலரின் சுயநலத்தினால் தான் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியடைய நேரிட்டதாக சங்கரன்கோவில் அதிமுக நிர்வாகியுடன் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்
சித்திரை மாத பிரமோற்சவ விழா திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: வடம் பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர்
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி