குற்றம் திண்டுக்கல் அருகே பணியில் இருந்த போலீஸ் மீது குடிபோதை இளைஞர்கள் தாக்குதல்!: 3 பேர் கைது..!! Jun 26, 2021 திண்டுக்கல் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலரை குடிபோதையில் தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விருவீடு பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே நல்லுதீவின்பட்டியில் இருந்து குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் போலீஸ் தடுப்பில் மோதி கீழே விழுந்தார். பணியில் இருந்த லோகநாதன் என்ற காவலர் கீழே விழுந்தவரை தூக்கிவிட்டு அறிவுரை சொல்லியுள்ளார். இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவலர் லோகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. பணியில் இருந்த காவலர் கடுமையாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலர் தாக்கப்படுவது குறித்த தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் குடிபோதையில் இருந்த ராஜா, ரஞ்சித் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். தொடர்ந்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்
தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் 2வது மாடியில் இருந்து கீழே தள்ளி ரியல் எஸ்டேட் புரோக்கர் படுகொலை: கொத்தனார் கைது