இந்தியா உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை ஏற்பாடுகள் தீவிரம்!: ரதங்கள் தயாரிக்கும் பணியில் சிற்பிகள் மும்முரம்..!! Jun 26, 2021 பூரி ஜெகந்நாத் கோயில் புவனேஷ்வர்: உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத்தை கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, ஜெகநாத், பாலபத்ரா, தேவி சுபத்ரா சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் காணொலி வாயிலாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், தேர் திருவிழாவில் பயன்படுத்தப்படும் ரதங்கள் தயாரிக்கும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர். மரங்கள் கொண்டு வந்து அதில் சிற்பம் செதுக்கி அலங்காரத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு பாதிப்புகள் இல்லாதவர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது. ஜூலை 12ம் தேதி நடைபெறவுள்ள ரத யாத்திரைக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை
திருப்பதியில் இருந்து சென்னைக்கு காளஹஸ்தி வழியாக சென்ற கார், பேருந்து மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
அமலாக்கப்பிரிவு தன் அரசியல் சட்டப்படியான கடமையை நிறைவேற்றவில்லை என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது: உச்சநீதிமன்றம் கருத்து
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!