முக்கிய செய்தி இந்தியா சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் நூதன முறையில் கொள்ளையடித்த மற்றொரு கொள்ளையன் வீரேந்தர் அரியானாவில் கைது!: தனிப்படை போலீசார் அதிரடி..!! Jun 26, 2021 சென்னை வீரந்தர் அரியானா அரியானா: சென்னையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் அரியானாவை சேர்ந்த மற்றொரு கொள்ளையன் வீரேந்தர் என்பவனை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கின்றனர். சென்னை நகரில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் உள்ள சி.டி.எம். இயந்திரங்களில் வடமாநிலத்தை சேர்ந்த மர்மக்கும்பல் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்தனர். குறிப்பாக ராமாபுரம், சின்மயா நகர், பாண்டி பஜார், வடபழனி, வேளச்சேரி, தரமணி, கீழ்ப்பாக்கம், பெரியமேடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் வடமாநில கும்பல் கைவரிசை காட்டினர். இதனையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 5 நாட்களாகவே ராஜஸ்தான், அரியானா, டெல்லி ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்தனர். முதலில் இந்த சம்பவம் தொடர்பாக அரியானாவை சேர்ந்த அமீர் அர்ஷ் என்பவனை கைது செய்து சென்னை அழைத்து வந்து 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அமீர் அர்ஷின் கூட்டாளியான வீரேந்தரை அரியானாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ட்ரான்சிட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். மற்ற கொள்ளையர்களை தேடும் பணியும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. காவலில் உள்ள ஏ.டி.எம். கொள்ளையன் அமீர் அர்ஷிடம் விசாரணை மேற்கொண்டதில், சென்னையில் 6 இடங்களில் கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 6 இடங்களில் நண்பர் வீரேந்தருடன் சேர்ந்து சி.டி.ஏம். எந்திரங்களில் கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளான்.
ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ₹25 கோடி லஞ்ச பேர விவகாரம்; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சர் மீது அவதூறு வழக்கு: பாஜக நிர்வாகி அளித்த புகாரில் கோர்ட் உத்தரவு
தமிழ்நாடு உட்பட 5 தென் மாநிலங்களில் இருக்கும் 42 நீர்த்தேக்கங்களில் 17% மட்டுமே நீர் இருப்பு: பாசனம் வசதி, குடிநீர் தேவை, மின் உற்பத்திக்கு கடும் பாதிப்பு; 10 ஆண்டில் இல்லாத அளவிற்கு நீர்மட்டம் சரிந்ததால் கவலை
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?.. விசாரணை தொடங்கியதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடைவெளி அதிகம் : உச்சநீதிமன்றம்
2 கட்ட வாக்கு சதவீதத்தை உடனடியாக இணையதளத்தில் வெளியிட்டு வாக்காளர்களின் நம்பிக்கையை மீட்க வேண்டும் :சீதாராம் யெச்சூரி வேண்டுகோள்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
கர்நாடகவில் பெரும் புயலை கிளப்பிய விவகாரம் : பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை பாஜக நிர்வாகியே வெளியிட்டதாக கார் ஓட்டுனர் வாக்குமூலம்!!
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க குரல் எழுப்பும் தினமாக அமையட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் மே தின வாழ்த்து
மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரங்களின் அசலை தாக்கல் செய்ய பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து
சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் – நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
அவசர உதவி எண் “100” செயல்படவில்லை… உங்கள் அழைப்பு வெயிட்டிங்கில் உள்ளது, தயவு செய்து காத்திருக்கவும் என்ற குரலால் மக்கள் அதிர்ச்சி!!
பாலியல் புகாரில் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய பிரஜ்வாலை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை.. கட்சியில் இருந்தும் அதிரடி நீக்கம்!!
தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது… கோவை தொகுதி தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்