சத்தியமங்கலம் : தாளவாடி மலைப் பகுதியில் பழமை வாய்ந்த மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. நேற்று காலை தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்டாபுரம் அருகே பழமையான மாமரம் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் மலைகிராம மக்கள் தாளவாடிக்கு செல்லமுடியாமல் தவித்தனர்.