சேலம்: சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில்விளை நிலங்களை கையகப்படுத்தினர்.
இதை எதிர்த்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.