முக்கிய செய்தி இந்தியா இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றுக்கு முதல் பலி!: ம.பி.யில் பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் உயிரிழப்பு..!! Jun 24, 2021 இந்தியா போபால்: மத்தியப்பிரதேசத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் இந்தியாவில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும். இந்தியாவில் மஹாராஷ்டிரா, கேரளா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபாலில் மூன்று பேருக்கும், உஜ்ஜெயின் மாவட்டத்தில் இருவருக்கும் டெல்டா பிளஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் உஜ்ஜெயின் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக மத்தியப்பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்திருக்கிறார். டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற நால்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்தியப்பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!!
தமிழிசை ராஜினாமா செய்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு!!
நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
அதிமுக, பாஜ கூட்டணியை உறுதிப்படுத்தாத நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிந்தது: வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம்
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார்! 2700 போலீசார் பாதுகாப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கோவையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணி தொடங்கியது; அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்பு
திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு
கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி: சற்று நேரத்தில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்; சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.40 லட்சம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்