முக்கிய செய்தி இந்தியா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பேசி, அடையாள அட்டை கட்டாயமில்லை!: மத்திய அரசு Jun 24, 2021 மத்திய அரசு டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பேசி வைத்திருக்க வேண்டும் என்பதோ அடையாள ஆவணங்களோ கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வீடற்றவர்கள் தடுப்பூசி போட முடியாமல் சதித்திட்டம் போல் புறக்கணிக்கப்படுவதாகவும், செல்பேசி மற்றும் இணையம் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பெற இயலாத ஆங்கிலம் தெரியாத ஏழை மக்கள், தடுப்பூசிக்காக பதிவு செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் செயலி மூலம் முன்னதாகவே இணையவழியில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பயனாளிகள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் கோ-வின் செயலியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஓடியா, வங்கம், அஜாமிஸ், பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 12 மொழிகள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. தடுப்பூசி சேவையை பெற சொந்தமாக செல்பேசி வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய புகைப்பட அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 9 அடையாள சான்றுகளில் ஒன்றை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் எதுவுமே இல்லாதவர்கள் மற்றும் செல்பேசி வைத்துக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி முகாம்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!