முக்கிய செய்தி இந்தியா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பேசி, அடையாள அட்டை கட்டாயமில்லை!: மத்திய அரசு Jun 24, 2021 மத்திய அரசு டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பேசி வைத்திருக்க வேண்டும் என்பதோ அடையாள ஆவணங்களோ கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வீடற்றவர்கள் தடுப்பூசி போட முடியாமல் சதித்திட்டம் போல் புறக்கணிக்கப்படுவதாகவும், செல்பேசி மற்றும் இணையம் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பெற இயலாத ஆங்கிலம் தெரியாத ஏழை மக்கள், தடுப்பூசிக்காக பதிவு செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கு கோ-வின் செயலி மூலம் முன்னதாகவே இணையவழியில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பயனாளிகள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் கோ-வின் செயலியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஓடியா, வங்கம், அஜாமிஸ், பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 12 மொழிகள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. தடுப்பூசி சேவையை பெற சொந்தமாக செல்பேசி வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய புகைப்பட அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 9 அடையாள சான்றுகளில் ஒன்றை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் எதுவுமே இல்லாதவர்கள் மற்றும் செல்பேசி வைத்துக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி முகாம்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதிமுக, பாஜ கூட்டணியை உறுதிப்படுத்தாத நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிந்தது: வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம்
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார்! 2700 போலீசார் பாதுகாப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கோவையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணி தொடங்கியது; அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்பு
திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு
கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி: சற்று நேரத்தில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்; சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.40 லட்சம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக தேர்தல்களில் தொடர் தோல்வி.. 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அரசியலுக்குள் குதிக்கும் தமிழிசை சவுந்தரராஜன்.. வரலாற்றை மாற்றி எழுதுவாரா?
அதிமுக கொடி,இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பு!!
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டி; மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்.. தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: அசுர வேகத்தில் திமுக கூட்டணி பங்கீடு.. எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சி போட்டி?.. முழு விவரம்
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி : ஒப்பந்தம் கையெழுத்தானது!!
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல்!!
தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ செயல்பாடு நேர்மையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி : ரகசிய எண்களை வெளியிடாதது ஏன் என சரமாரி கேள்வி!!