முக்கிய செய்தி சென்னை என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி : பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை Jun 24, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கே. ஸ்டாலின் சென்னை: எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு திரும்பப்பெறப்படும் என பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மீத்தேன், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும். மேலும் ரூ.100 கோடி செலவில் திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன் என ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். மேலும் நீதிக்கட்சி வரலாற்று தொடர்ச்சியில் திமுக ஆட்சி அமைத்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துகொள்கிறேன் என தெரிவித்தார். கவர்னர் உரை ஒரு முன்னோட்டம் தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என கூறினார். கடந்த இரண்டு தினங்களாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இந்த அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துகொள்கிறேன் என தெரிவித்தார்.
நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
அதிமுக, பாஜ கூட்டணியை உறுதிப்படுத்தாத நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிந்தது: வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் கட்சிகள் தீவிரம்
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார்! 2700 போலீசார் பாதுகாப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
கோவையில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணி தொடங்கியது; அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் பங்கேற்பு
திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு
கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி: சற்று நேரத்தில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்; சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.40 லட்சம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழக தேர்தல்களில் தொடர் தோல்வி.. 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அரசியலுக்குள் குதிக்கும் தமிழிசை சவுந்தரராஜன்.. வரலாற்றை மாற்றி எழுதுவாரா?
அதிமுக கொடி,இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பு!!
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டி; மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்.. தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: அசுர வேகத்தில் திமுக கூட்டணி பங்கீடு.. எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சி போட்டி?.. முழு விவரம்