தமிழகம் வேளாண்மை துறையில் ரூ.1000 கோடி முறைகேடு?: போலி விவசாயிகள் பெயரில் மோசடி செய்திருப்பதாக புகார்...ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல்..!! Jun 22, 2021 Icourt மதுரை: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதால் லஞ்சஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ளக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனப்பாறையை சேர்ந்த அப்துல்லா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார். அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், தமிழ்நாடு வேளாண்மைத்துறை சார்பில் வழங்கக்கூடிய மானிய திட்டங்கள் 2013ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை வேளாண் இயக்குநர்கள், அதிகாரிகள், உதவியாளர்கள் என பலர் முறைகேடாக செய்யப்பட்டதாக புகார் கூறியுள்ளார். பல்வேறு வேளாண் திட்டங்களில் போலி விவசாயிகளை பயனாளிகளாக்கி வழங்கி இருப்பதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். சொட்டுநீர் பாசன உபகரணங்களை வழங்கும் திட்டம், இயந்திரங்கள் கொள்முதல் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் போலி விவசாயிகள் பயனடைந்திருப்பதாக மனுதாரர் புகார் கூறியுள்ளார். தமிழ்நாடு நீர்நிலை முகமை மேம்பாடு திட்டம், நிலையான நீர்ப்பாசன திட்டம், உழவர் உற்பத்தியாளர் குழு திட்டம், பயிர் காப்பீடு திட்டம் ஆகிய திட்டங்களில் போலி விவசாயிகள் பெயரில் முறைகேடு செய்திருப்பதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக வேளாண்துறை இயக்குநர், புயல் நிவாரண நிதியை வழங்கி இருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த முறைகேடுகள் அரங்கேறி இருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு திட்டங்களை செயல்படுத்தி ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி இருக்கும் மனுதாரர், இதுபற்றி லஞ்சஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தட்சணாமூர்த்தி மீது புகார் உள்ளதால் அவரை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் அதிகாரிகள் சிலர் தற்போது பணி ஓய்வு மற்றும் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு
அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை செய்ய நடவடிக்கை ேகாரி வழக்கு: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி எப்படி விநியோகமாகும்? ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்: ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது
சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குங்கள்: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்