முக்கிய செய்தி சென்னை குறையும் கொரோனா தொற்று!: 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!! Jun 21, 2021 குறை கொரோனா தொற்று தமிழ்நாடு அரசு சென்னை: 1.13 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜூன் 17ம் தேதி வரை 1 கோடியே 18 லட்சத்து 17 ஆயிரத்து 690 டோஸ் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, 1 கோடியே 12 லட்சத்து 88 ஆயிரத்து 640 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருபவர்களுக்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை பொறுத்தமட்டில் தற்போதைய சூழலில் 66 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், அதுமட்டுமின்றி கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் அதற்கான பட்டியலும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்திருக்கிறார்கள்.
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!
மக்களுக்கு ஓர் ஜில் அறிவிப்பு!: மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..பிரதீப்ஜான் கணிப்பு..!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி; மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மக்களுக்கு வழங்கினார்..!!
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040க்கு விற்பனை.! பொதுமக்கள் அதிர்ச்சி
மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு!: குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!