கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுத் தருவார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை : சென்னை சைதாப்பேட்டையில்  பருவமழைக்கு முன்பாக கழிவுநீர் கட்டமைப்புகளை முழுமையாக தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழைக்கு முன்னாள் பாதாள சாக்கடை பிரதான குழாய் அடைப்புகளை  தூர்வாருதல் போன்ற பணிகள் ஆண்டுதோறும் செய்வது வாடிக்கை, ஆனால்  கடந்த காலங்களில் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது.இதனால் 434 வாகனங்கள் மூலம் சென்னையில் 4200 கிலோ நீலம் உள்ள பாதாளசாக்கடை தூர்வாரும் பணி  மற்றும் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது.30 ம் தேதி வரை இப்பணி நடைபெறும். இந்த பணிகள் மூலம் மழை காலங்களில் மக்களுக்கு ஏற்படும் அசவுகரியம் தவிர்க்கப்படும்.

கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும்  மக்கள் முக கவசம் அணிவது ,சமூக இவெளியை பின்பற்றுவது  போன்ற  4  தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றினால்  3 வது அலை நம்மை பாதிக்காது.

மேலும் தடுப்பூசி போடும் பணி மிக விரிவுபடுத்தப்பட்டுள்ளது, நிச்சயம் நமக்கு தேவையான தடுப்பூசிகள் வரும் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கான 14 லட்சம்  தடுப்பூசிகளில்  இம்மாத  இறுதிக்குள் வர உள்ளது .

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெறுவதால்  கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை   மத்திய அரசு தொகுப்பில் இருந்து தர உள்ளனர்.மேலும் மத்திய அரசு  அடுத்த மாதம் தமிழ்நாட்டிற்கு  71 லட்சம் தடுப்பூசிகளை தர இருக்கின்றனர்.

மேலும் செங்கல்பட்டு மற்றும் குன்னூர் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம், அனுமதி கிடைத்தால் நாட்டிற்கே நல்லது. நீட் தேர்வு ரத்து  தொடர்பாக ஏற்கனவே  சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படதா நிலையில்  உள்ளதால் தற்போது  ஓய்வு பெற்ற நீதிபதி   ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையோடு சேர்த்து நீட் ரத்து தீர்மானம் அனுப்ப உள்ளோம்.

 நீட் விலக்கை கண்டிப்பாக கேட்டுப்பெருவோம். நீட்டுக்கு எதிரான கருத்துக்களை  பாதிக்கப்பட்டவர்கள் ஏ.கே.ராஜன் குழுவிற்கு தெரிவிக்கலாம் என்று கூறினார். மேலும் நீட்  தேர்வு ரத்து  தொடர்பாக சந்தேகம் தேவையில்லை கண்டிப்பாக நீட்டில்  இருந்து விலக்கை  தமிழக  முதல்வர் பெற்றுத்தருவார் என்று உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: