தமிழகம் குமரியில் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர், கூட்டுறவு சங்க செயலாளரான பெண்ணுக்கு கொலை மிரட்டல்!: வீடியோ காட்சிகள் வெளியீடு..!! Jun 18, 2021 ஜனாதிபதி புறத்தோற்றக் கூட்டுறவு சங்கம் குமாரி குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் கூட்டுறவு சங்க செயலாளரான பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக பிரமுகர் மோகன்தாஸ் உள்ளார். இவர் அதிமுகவின் வால்வச்சகோஷ்டம் பேரூர் செயலாளராகவும் பதவி வகித்திருக்கிறார். இவர் அந்த கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக 34 ஆண்டுகளாக பணிபுரியும் கேசியா என்ற பெண்ணை பணி செய்விடாமல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மோகன்தாஸ் பதவியேற்றது முதலே கேசியாவை சங்க விதிகளுக்கு புறம்பாக செயல்பட வற்புறுத்தியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்த மோகன்தாஸ், செயலாளர் கேசியாவை தரக்குறைவாக பேசியிருப்பதோடு, என்னிடம் மோதினால் தீர்த்துக்கட்டிவிடுவேன் என்று பகிரங்கமாக கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். அங்குள்ள பணியாளர்கள் தடுத்தும் கேசியாவை தாக்க அவர் முயற்சித்திருக்கிறார். இவை அனைத்தும் பணியாளர்களால் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு தற்போது இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளரான கேசியாவிடம் கேட்ட போது கடந்த 8 ஆண்டுகளாக மோகன்தாஸால் தான் மிகுந்த மனஉளைச்சலில் தவித்து வருவதாக கூறினார். மேலும் இதுகுறித்து தான் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் மோகன்தாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். இதனிடையே கூட்டுறவு சங்க செயலாளரான பெண் ஊழியரை சங்க தலைவரே தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
‘பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்களாம்…’ துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் விநோத திருவிழா: ஆண்டிப்பட்டி அருகே ருசிகரம்
ஏற்காடு மலைப்பாதையில் 5 பேர் பலி: வேகமாக பஸ்சை ஓட்டியதே விபத்துக்கு காரணம்: 4 பிரிவுகளின் கீழ் டிரைவர் மீது வழக்கு
சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று வீசிய மர்ம நபர்கள்: தற்கொலை செய்த ஆண் சடலமும் மீட்பு
இன்று முதல் இயக்கப்படுவதாக அறிவித்த தி.மலை- சென்னை பீச் பாசஞ்சர் ரயில் திடீர் ரத்து: பொதுமக்கள், பக்தர்கள் ஏமாற்றம்
கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா?.. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவருக்கு வைகோ கண்டனம்: வழக்கை விரைவுபடுத்தி உரிமையை நிலைநாட்ட அரசை வலியுறுத்தல்
திருமணத்திற்கு முன்பு காதலனால் கர்ப்பம்: தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ்: ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
வெப்ப அலை வீசுவதால் ஏரிகளில் வேகமாக ஆவியாகும் தண்ணீர்: மொத்தம் 6 டிஎம்சி நீர் இருப்பதால் அக்டோபர் வரை சீரான குடிநீர் சப்ளை; பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை
காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி; 5 கிமீ தூரம் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி