முக்கிய செய்தி சென்னை கோடி கணக்கில் சொத்து குவிப்பு!: பப்ஜி மதனின் வங்கி கணக்கை முடக்கியது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்..!! Jun 18, 2021 பூப்ஜி சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை சென்னை: பப்ஜி மதனின் வங்கி கணக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். யூ - டியூபர் மதன் தடை செய்யப்பட்ட பப்ஜி செயலியை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து அதில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் எழுந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் தலைமறைவானார். இதையடுத்து தர்மபுரியில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவருடைய மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் தான் யூ - டியூப் சேனலுக்கு நிர்வாகி என தெரியவந்தது. சாதாரணமாக சென்னை அம்பத்தூரில் 2018ம் ஆண்டு ஹோட்டல் நடத்தி வந்த மதன் அதன் பின்னர் பணமோசடி செய்து ஏமாற்றிவிட்டு தலைமறைவான பிறகு இதுபோன்ற யூ - டியூப் சேனலை தொடங்கி ஆபாசமாக பேசி கோடிக்கணக்கில் சம்பாதித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே அவரது மனைவியை கைது செய்த போதே மதனின் வங்கி கணக்குகள் மற்றும் அது தொடர்பான முதலீடுகள் அனைத்தையும் போலீசார் கண்டறிந்தனர். குறிப்பாக பிட் காய்னிலும், பங்கு வர்த்தகத்திலும் அதிகளவு முதலீடு செய்தது தெரியவந்தது. பெருங்குளம், சேலம் ஆகிய இடங்களில் சொகுசு பங்களாக்கள் கண்டிருப்பதும், 3 சொகுசு கார்கள் ஆகியவற்றையும் இவர் சொத்துக்களாக குவித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இவரது வங்கி கணக்கை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிந்துரை கடிதம் எழுதப்பட்டது. அதன்படி பப்ஜி மதனின் வங்கி கணக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மதனின் வங்கி கணக்கில் ரூபாய் 4 கோடி டெபாசிட் உள்ளது. யூ- டியூப்பில் இருந்து வழங்கப்படும் பணம் இந்த வங்கி கணக்குக்கு தான் வரும். மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!