சென்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு..!! Jun 18, 2021 அமைச்சர் மணிகண்டன் சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக பாலியல் பலாத்காரம், கட்டாய கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது தொடர்பான ஆதாரங்களை அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தீவிரமாக திரட்டி வந்தார்கள். குறிப்பாக சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவரையும் விசாரணைக்கு உட்படுத்தி அது தொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியிலும் தீவிரம் காட்டி வந்தனர். இதற்கிடையே முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுதாக்கல் செய்திருந்தார். அதற்கு காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முன்ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது செல்போன் சிக்னல்-ஐ வைத்து தேடுதல் வேட்டை நடைபெற்ற போது மணிகண்டன் அதனை தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாகவும், அவரது உதவியாளர் மூலமாகவே செல்போன் கொண்டு பலரையும் தொடர்பு கொண்டு வருவதாகவும் தெரியவந்திருக்கிறது. தற்போது மணிகண்டனை பிடிக்க மதுரைக்கு தனிப்படை போலீஸ் விரைந்துள்ளது.
கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110 கோடியில் நவீன வசதிகளுடன் 6 மாடியில் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டம் வடசென்னை மக்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு
மாநகராட்சி ஆணையர் பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி: காவல் நிலையத்தில் புகார்
பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து வெளியேற வசதியாக நீர்நிலை, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: அகற்றப்படும் குடும்பங்களுக்கு வேறு இடங்களில் வீடு ஒதுக்கீடு
திருவான்மியூரில் கழுத்து அறுத்து பெண் கொலை பக்கத்து வீட்டு சிறுவன், 2 நண்பர்களுடன் கைது: மது அருந்த, கஞ்சா புகைக்க தடையாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை