முக்கிய செய்தி சென்னை தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக பணியாற்றியவர்கள், நிறுவனங்களுக்கு அரசு விருது அறிவிப்பு..!! Jun 17, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக பணியாற்றியவர்கள், நிறுவனங்களுக்கு அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * விருதுக்கு தேர்வானோருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ், ரொக்க பரிசுகள் அரசு சார்பில் வழங்கப்படும். * மாற்று திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள், அவர்களுக்காக பணிபுரிவோருக்கு ஊக்கம் அளிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * மாற்று திறனாளிகளுக்காக பணி செய்தோர், விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது. * மாற்று திறனாளிகளுக்கு அரும்பணியாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு தங்க பதக்கம், ரூ.25,000, சான்றிதழ் வழங்கப்படும். * தேர்வான தொண்டு நிறுவனங்களுக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ.50,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். * மாற்று திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். * மிக அதிகமாக மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கு தங்க விருது, சான்றிதழ் வழங்கப்படும். * மாற்று திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய சமூக பணியாளருக்கு தங்க விருது, சான்றிதழ் வழங்கப்படும். * மாற்று திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது, சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!