திருச்சுழி: திருச்சுழி அருகே வறட்சியால் கிராமத்தை காலி செய்து விட்டு மக்கள் வெளியேறினாலும் தம்பதி மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குச்சம்பட்டி கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. அப்போது குண்டாறில் சுமார் 6 மாதங்களுக்கு இடைவிடாது மழைநீர் செல்வது வழக்கம். இதனால் இப்பகுதியில் விவசாயம் செழித்து, கிராம மக்கள் வசதி படைத்தவர்களாக வாழ்ந்துள்ளனர். ஆனால், வருடங்கள் செல்லச் செல்ல மழை பொய்யாமல் குண்டாறில் நீர்வரத்து இல்லாமல் போனது. இதனால் குச்சம்பட்டி கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.