தமிழகம் ‘கொரோனா தொற்று வேகமெடுக்கும் காலத்தில் தமிழ்நாடுதான் மிகவும் பாதுகாப்பான இடம்’!: உ.பி. தொழிலாளர்கள் கருத்து..!! May 21, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் உ.பி. சென்னை கொரோனா தொற்றுநோய் சென்னை: கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழலில் தமிழ்நாடுதான் மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று உத்திரப்பிரதேச மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் எம்.பி. தொகுதியான கோராக்பூரை சேர்ந்த பல்லாயிரம் கூலி தொழிலாளர்கள் சென்னை, அம்பத்தூர், அண்ணாநகர், ராமாபுரத்தில் தங்கியுள்ளனர். உத்திரபிரதேசத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தாங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதையே பாதுகாப்பாக கருதுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பு மிக சிறப்பாக இருப்பதே அதற்கு காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தங்களது வேலைக்கான கச்சாப்பொருட்கள் தட்டுப்பாடு மட்டுமே தற்போது நிலவுவதாகவும் அதை தாண்டி தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட எந்த அவசியமும் ஏற்படவில்லை என்று உத்திரப்பிரதேச மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு தங்களுக்கு இரண்டாவது தாய் வீடு போல உள்ளதாக அவர்கள் நன்றிப்பெருக்குடன் தெரிவித்துள்ளனர். யோகி ஆதித்யநாத் தொகுதியில், 2 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமே இருப்பதால் தங்கள் குடும்பத்தினரின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். … The post ‘கொரோனா தொற்று வேகமெடுக்கும் காலத்தில் தமிழ்நாடுதான் மிகவும் பாதுகாப்பான இடம்’!: உ.பி. தொழிலாளர்கள் கருத்து..!! appeared first on Dinakaran.
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை
அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே
மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்
திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு
குரூப் 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடையால் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம் தகவல்
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 9, 10 தேதிகளில் 1,175 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்
அக்டோபர் 29ம் தேதி வரைவு பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
மகன் அஸ்வத்தாமனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதால் ஆம்ஸ்ட்ராங் கொலை சதி திட்டத்தை சிறையிலிருந்து தீட்டிய நாகேந்திரன்: 5000 பக்க குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தரும் தகவல்கள்; தனித்தனியாக பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி?
அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
இந்திய விமானப்படையின் சாகச முழு ஒத்திகை வானில் வர்ண ஜாலங்களுடன் சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்: மெரினாவில் குடும்பத்துடன் கண்டு ரசித்த பொதுமக்கள்