சிவகங்கை: தனது 6 மாத குழந்தையை அனாதை எனக்கூறி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து நாடகமாடிய தந்தை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூருக்கு காரில் செல்லும்போது வழியில் திருப்பாச்சேத்தியில் சாலையோரத்தில் 6 மாத பெண் குழந்தை கிடந்தது எனக்கூறி, 2 இளைஞர்கள் கடந்த 11ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். தங்களது சொந்த ஊர் மதுரை மாவட்டம், திருமங்கலம் என தெரிவித்தனர். இந்த குழந்தை குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின்பேரில் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயா, குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலர் சைமன்ஜார்ஜ், மாவட்ட குழந்தைகள் நலக் குழுத்தலைவர் சரளா மற்றும் உறுப்பினர்கள் விசாரணை செய்தனர்.