நினைவு சின்னங்கள் நாளை திறப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள 3,693 நினைவு சின்னங்கள், 50 அருங்காட்சியகங்கள் கடந்த ஆண்டு மூடப்பட்டன.  ஜூன் 15ம் தேதி (இன்று) வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒவ்வொரு மாநிலமாக தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, தற்போது மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள் நாளை முதல் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related Stories: