சென்னை: பாமகவை விமர்சனம் செய்த கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோன்று சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 17 பேரும் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தேர்தலில் தோற்ற பிறகு கூட்டணி கட்சியை குறை கூறுவது பாமகவுக்கு வழக்கமாக உள்ளது. சின்ன கட்சியான பாமக எங்களை விமர்சிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. பாமகவால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேற்று முன்தினம் சென்னையில் பேட்டி அளித்தார். இது, அதிமுக - பாமக கூட்டணி இடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை், கட்சிகட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட வா.புகழேந்தி (அதிமுக செய்தி தொடர்பாளர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.