முக்கிய செய்தி சென்னை நீட் தேர்வு விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவுடன் ஆலோசனை தொடக்கம் Jun 14, 2021 ராஜன் சென்னை: நீட் தேர்வு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு அமைத்த 9 பேர் கொண்ட குழு இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் இதுவரை தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவையும் நியமித்தார். அந்த குழு, நீட் தேர்வின் பாதிப்பு பற்றி ஆராய்வதோடு மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாணவர் சேர்க்கை முறையை அரசுக்கு பரிந்துரைக்கும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். நீட் தேர்வு விவகாரம் குறித்து ஏ.கே ராஜன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் நியமித்த 9 பேர் கொண்ட குழு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய்ந்து இக்குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு!
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!